யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு கலந்துரையாடலிற்கு சென்ற நிலையில் மாணவர்கள் பயணித்த வாகனத்தையும் மாணவர்களையும் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்த நிலையில் புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்த நிலையிலும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தனர்.
வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்று மாணவர்கள் சிவில் சமூகங்கள் பாதிக்கப்பட்ட தரப்புக்கும் இணைதது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடு பதிவாகியுள்ளது.