கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த MV Express Pearl கப்பல், அதன் நிறுவனத்தால் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கப்பலின் மீட்பு நடவடிக்கைகளை சீனாவில் உள்ள ஷாங்காய் சால்வேஜ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எரிந்து மூழ்கியதாகவும், கப்பலின் பாகங்கள் அதன் நிறுவனத்தினால் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.