29.5 C
Jaffna
March 27, 2023
உலகம் முக்கியச் செய்திகள்

ஏவுகணை தாக்குதலில் ஒரு நிமிடத்தில் கொன்றுவிடுவேன் என புடின் மிரட்டினார்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

ஏவுகணைத் தாக்குதலில் கொன்றுவிடுவேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டினார், “இதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்” என்று எச்சரித்தார் என இங்கிலாந்தின் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியபோது ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஒரு ஆவணப்படத்திற்காக பிபிசியிடம் பேசிய ஜோன்சன், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ரஷ்ய தலைவர் தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் “எதிர்காலத்திற்கு” அப்படி நடக்காது என்று பதிலளித்ததாகவும் கூறினார்.

“அவர் ஒரு கட்டத்தில் என்னை அச்சுறுத்தினார், அவர் கூறினார், ‘போரிஸ், ஆனால், ஒரு ஏவுகணை மூலம் நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே தேவை அல்லது அது போன்ற ஏதாவது வழியில்” என குறிப்பிட்டதாக ஜோன்சன் கூறினார்ஃ

பெப்ரவரி 2022 இல் “மிக நீண்ட” மற்றும் “மிகவும் அசாதாரணமான” அழைப்பில் இந்த உரையாடல் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

பொரிஸ் ஜோன்சன் அதற்கு சற்று முன்பாகத்தான் உக்ரைனிற்கு சென்று வந்திருந்தார்.

“அவர் எடுத்துக்கொண்டிருந்த நிதானமான தொனியில் இருந்து, அவர் கொண்டிருந்த பற்றின்மையிலிருந்து, அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதற்கான எனது முயற்சிகளுடன் அவர் விளையாடினார்.” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய அணுஆயுதங்கள் பெலாரஸிலும் நிலைநிறுத்தப்படும்!

Pagetamil

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

Pagetamil

சிரியாவில் அமெரிக்க தளம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்கா பதில் தாக்குதல்!

Pagetamil

கனடாவில் 1 வருடத்தில் 10 இலட்சம் புதிய குடிமக்கள்

Pagetamil

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!