தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவரைப் புகழ்ந்து பேசுவதில் எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“மறைந்த பிரபாகரனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நடத்தப்படும் போது, தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரைப் புகழ்ந்து பேசக்கூடாது என்ற நிபந்தனை நியாயமானதும் பொருத்தமானதுமல்ல… பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்படக் கூடாது.” என சட்டத்தரணி எஸ்.துரைசாமியின் சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்டு நீதிபதி ஜி.சந்திரசேகரன், கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஆனால், அந்த பேச்சு தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்றும் நட்பு நாடுகளான சார்க் நாடுகளின் இறையாண்மையை பாதிக்கக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியை அனுமதிக்க கோயம்பேடு போலீசார் விதித்த 3 நிபந்தனைகளை ரத்து செய்யும்படி, திரைப்பட தயாரிப்பாளரும், நிகழ்ச்சி அமைப்பாளருமான புகழேந்தி தங்கராஜ் சார்பில், அவரது சட்டத்தரணி துரைசாமி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி தொடர்பில், டிசம்பர் 3 ஆம் திகதி, ஏற்பாl்டாளர்கள் விடுத்த கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர்.
டிசம்பர் 14 அன்று, ‘பொருத்தமான நிபந்தனைகளுடன்’ நிகழ்ச்சியை அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 21 அன்று, பல நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கினர்.
முதல் நிபந்தனை – தடை செய்யப்பட்ட இயக்கங்களையோ அல்லது அதன் தலைவர்களையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகழ்ந்து பேசக்கூடாது மற்றும் தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டது. இரண்டாவது நிபந்தனை நிகழ்வை மூன்று மணி நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுப்படுத்தியது. மூன்றாவது நிபந்தனை, நிகழ்ச்சியை முழுவதுமாக வீடியோ எடுத்து காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களை கட்டாயப்படுத்தியது.
மூன்று நிபந்தனைகளையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரருக்கு நிகழ்ச்சியை நடத்த குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தேவை என்று சட்டத்தரணி துரைசாமி வாதிட்டார், மேலும் சட்டப்பூர்வ ஆய்வுக்காக போலீசார் நிகழ்ச்சியை கண்காணித்தபோது, மனுதாரர் முழு நிகழ்ச்சியையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லை என்றும் கூறினார்.
சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தடைசெய்யப்பட்ட அமைப்பையோ அல்லது அதன் தலைவரையோ புகழ்ந்து பேச யாரும் அனுமதிக்கப்படக்கூடாது என்ற மாநில அரசின் எதிர்ப்பை நிராகரித்தார்.
இது சம்பந்தமாக, நீதிபதி, தடாவின் பிரிவு 3(5) அல்லது யுஏபிஏவின் பிரிவு 10, தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது குற்றமாகாது என்பதை அவர்களின் எளிய மொழியில் தெளிவாகக் கூறுகிறது. “யுஏபிஏவின் பிரிவு 10 ஐயும் எஸ்சி கையாண்டது மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவளிப்பது ஒரு குற்றமாக மாறாது” என்று நீதிபதி சந்திரசேகரன் கூறினார்.



