குமார் பொன்னம்பலம் நினைவு

Date:

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் இன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், குமர் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகை சுடரும் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், பொதுமக்களும் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மத குருமார்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்