கனடாவில் இந்த ஆண்டின் முதல் பிரசவம் தமிழ் குழந்தை!

Date:

கனடாவின் நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்கு பிரசவமானது.

தமிழர்களான சௌபர்ணிகா மதியழகன் மற்றும் லோக் மனோகர் தம்பதியினரின் மகனான சஞ்சித் லோக் என்ற குழந்தையே அந்த மருத்துவமனையில் 2023இல் பிறந்த முதல் குழந்தையாகும்.

6 பவுண்டுகள் எடையுள்ள சஞ்சித் லோக் என்ற ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தெரிவித்தது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையின் பாரம்பரியத்தின்படி, பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்திற்கு ஒரு போர்வை பரிசாக வழங்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 4,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரசவமாகின்றன. கடந்த ஆண்டு 4,663 குழந்தைகள் பிரசவமாகின.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்