வீட்டு பொருட்களை விற்று போதைப்பொருள் பாவனை: மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாயார்!

Date:

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான மகனை, தாயாரே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தந்தை இல்லாத நிலையில், தாயாரே குடும்ப பாரத்தை சுமந்து, மகனை சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக மகன், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணமில்லாத நிலையில், வீட்டிலிருந்த பொருட்களை விற்பனை செய்தும், அடமானம் வைத்தம் போதைப்பொருள் வாங்கியுள்ளார்.

தாயாரின் மோதிரத்தை தருமாறு இளைஞன் வற்புறுத்த தொடங்கிய நிலையிலேயே, தாயார் பொலிசாரிற்கு அறிவித்து, இளைஞனை கையளித்துள்ளார்.

இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் போதைப்பொருள் பாவிப்பது உறுதியானது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறுவனிடம் கார் ஓட்டக்கொடுத்த தந்தை மீதும் வழக்கு

புதன்கிழமை (13) அன்று, 15 வயது பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற...

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்