வடமராட்சி இளைஞர்களின் முன்னுதாரண உதவி!

Date:

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறு பிள்ளையொன்று தவறவிட்ட மோதிரத்தை இரண்டு இளைஞர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று வழிபாட்டிற்கு வந்திருந்த குடும்பமொன்றின் சிறு பிள்ளையொருவர், ஆலய வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கையில் அணிந்திருந்த பெறுமதியான தங்க மோதிரத்தை தவறவிட்டிருந்தார்.

சற்று தாமதமாக விடயத்தை அறிந்த குடும்பத்தினர் அதை தேட ஆரம்பித்தனர்.

இதை அவதானித்த இரண்டு இளைஞர்களும், அவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். சில மணித்தியால தேடுதலின் பின்னர், அந்த இளைஞர்களில் ஒருவர் மோதிரத்தை கண்டெடுத்தார்.

குடும்பத்தினர் வழங்கிய அன்பளிப்பையும் அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்தவர்கள் இளைஞர்களை வெகுவாக பாராட்டினர்.

 

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்