எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மேலவை இலங்கை கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் என அந்த கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (13) நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என கூட்டமைப்பின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுக்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1