கந்தளாயில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்தளாய் பகுதியில் உயிரிழந்த இரு குழந்தைகளின் மரணம் தொடர்பான விசாரரணைகள் நடந்து வருகின்றன.
உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், கடும் குளிரால் குழந்தைகள் உயிரிழந்ததாக நம்புகிறோம் என்றனர்.
கந்தளாய் பேரத்துவலி மற்றும் அதனை அண்டிய ராஜஎல பிரதேசத்தில் 3 மாதம் மற்றும் 2 வயதுடைய இரண்டு சிறுவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், 3 வயதுடைய குழந்தை மூளைக்குள் கிருமி புகுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக பரிசோதனைகளுக்காக மற்றைய குழந்தையின் உடல் உறுப்புகளை கொழும்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




