எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு: திங்கள்கிழமை சீராகும்!

Date:

நாட்டில் நிலவும் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (7) முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மனிதனால் உருவாக்கப்பட்டதே எனவும், விநியோகஸ்தர்களால் தேவையான எரிபொருள் இருப்புகளுக்கான ஓர்டர்களை வழங்குவதில் தவறியமையே பிரதான காரணம் எனவும் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

“தங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் இழப்புகளுக்கு, சரியான நேரத்தில் ஓர்டர் செய்யத் தவறிய டீலர்கள் தான் காரணம்,” என்று அவர் கூறினார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி மேலும் குறைக்கப்படும் என விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாததால், டீலர்கள் மீண்டும் ஓர்டர் செய்யத் தொடங்கினர்.

உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை ஏற்பட்டால், நிலைமையை மீட்டெடுக்க குறைந்தபட்சம் மூன்று நாட்கள் ஆகும். அதன்படி, திங்கட்கிழமை பிற்பகலில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு முடிவுக்கு வந்து, விநியோகம் வழக்கம் போல் தொடங்கும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்