பொத்தபிட்டிய கொடுகொட வைத்தியசாலையின் துப்புரவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘லைசோல்’ என்ற இரசாயனத்தால், இரு ஊழியர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், வைத்தியசாலையின் பணியாளuர்கள் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.
“இருவரும் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலை உதவிப் பணியாளருக்கு 54 வயது எனவும் இளநிலை ஊழியருக்கு 48 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்புரவுப் பணிகளுக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ‘லைசோல்’ என்ற மருந்து இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட ஊழியர்களின் தோலில் 75 வீதமானோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.




