புடின் தொட முடியாத தரைவழி தானிய ஏற்றுமதிப் பாதைக்கு முயல்கிறோம்: பிரான்ஸ்!

Date:

கருங்கடல் வழியான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியதை அடுத்து, போலந்து அல்லது ருமேனியா வழியாக உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய செயற்பட்டு வருவதாக பிரான்ஸ் விவசாய அமைச்சர் திங்களன்று கூறினார்.

“கருங்கடலைக் கடக்க முடியாவிட்டால், அதற்குப் பதிலாக தரைவழிப் பாதைகள் வழியாகச் செல்ல முடியுமா, குறிப்பாக ருமேனியா மற்றும் போலந்து வழியாக நில வழிகளை நாங்கள் பார்க்கிறோம்,” என்று விவசாய அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ RMC வானொலியிடம் கூறினார்.

“இந்த விஷயத்தில் நல்ல அல்லது கெட்ட எண்ணங்கள் கை வைக்காத ஒரு அமைப்பை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று  ஃபெஸ்னோ கூறினார்.

சனிக்கிழமையன்று, கிரிமியாவில் உள்ளரஷ்ய கருங்கடல் கடற்படை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. இந்த தாக்குதலில் திட்டமிடலில் பிரித்தானியர்களும் ஈடுபட்டதாக ரஷ்யா குறிப்பிட்டது. அத்துடன், கனடாவில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் அமைப்புக்கள் ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறியது.

இந்த தாக்குதலையடுத்து கருங்கடல் வழியான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா “காலவரையற்ற காலத்திற்கு” விலகியது.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்த முன்வந்தன. மேலும் 16 தானியம் ஏற்றிய கப்பல்களை நகர்த்துவதற்கு திங்களன்று ஒப்புக்கொண்டன.

தாம் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர் கருங்கடல் வழியான தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியதைத் தொடர்ந்து திங்களன்று கோதுமை மற்றும் சோளம் இரண்டின் விலையும் உயர்ந்தது.

 

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்