ஈரானின் புரட்சிகர காவலர்களை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை!

Date:

ஈரானின் புரட்சிகர காவலர்களை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தலாமா என்பதை ஜெர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்து வருவதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ARD ஒளிபரப்பாளருக்கு அளித்த பேட்டியில், “புரட்சிகர காவலர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுவது எப்படி என்பதை நாங்கள் ஆராய்வோம், பொருளாதாரத் தடைகளின் மற்றொரு தொகுப்பைத் தொடங்குவோம் என்று கடந்த வாரம் நான் தெளிவுபடுத்தினேன்“ என்றார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை புரட்சிகர காவலர்கள் கடுமையாக நசுக்குவதாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கும் கடைசி நாளாக சனிக்கிழமை இருக்கும் என்று புரட்சிகர காவலர் தலைவர் எச்சரித்ததை அடுத்து ஜேர்மனியின் கருத்துக்கள் வந்துள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தடைகள் பொதிக்கு அப்பால் ஈரான் மீதான நுழைவுக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக ஜெர்மனி கடந்த வாரம் கூறியது.

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் பேபாக் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை 2026 ல் $8 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்திய கதை: உண்மையா வதந்தியா?

"$8 பில்லியன்" என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது? இந்த எண்ணிக்கை, இலங்கையின் பல்லாண்டு...

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்