28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

தவறுகள் நடந்து விட்டனதான்; போராட்டங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியாது: சொல்கிறார் மஹிந்த!

நாட்டின் பிரச்சினைகளை போராட்டங்களால் தீர்க்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், பதவியிலிருந்து மக்களால் விரட்டப்பட்ட பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிலாபம், ஆராச்சிக்கட்டுவவில் நேற்று நடைபெற்ற பெரமுனன் ஆனமடுவ தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரும் பெரமுனவின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான சனத் நிஷாந்தவினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

“சிலரின் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், நாங்கள் வேண்டுமென்றே நாட்டுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. எதிர்காலத்தில் கூட அவ்வாறு செய்ய மாட்டோம். சிலர் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள், ஆனால் அவர்களின் தீவிரம் அவர்களுக்கு கூட தெரியாது. COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்றும் நம் அனைவருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தச் சூழலை சிலர் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களைத் தூண்டிவிடுகிறார்கள், ஆனால் அதே நபர்கள் நாட்டின் சார்பாக பொறுப்புகளை வழங்கும்போது தயங்குகிறார்கள், ”என்று மஹிந்த கூறினார்.

வெகுஜன போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டிற்கு தீ வைப்பது எளிது, ஆனால் அதை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம். நாட்டைக் கட்டியெழுப்புபவர்களின் பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், அழிப்பவர்களை அல்ல. உங்களது அனைத்துப் பிரச்சினைகளையும் எங்களால் ஒரேயடியாகத் தீர்க்க முடியவில்லை என்றாலும், படிப்படியாகச் செய்து வருகிறோம். ஆனால், மக்களைத் தூண்டிவிட்டு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. சவால்களுக்கு அஞ்சாதவர்களால் மட்டுமே இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும், இன்றும் அந்த பணிக்கான சிறந்த குழு பெரமுன“ என்றார்.

எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு அவர்கள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லாததால் தவறு நடந்துள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பதால் எங்களால் திருத்த முடியாத மற்ற தவறுகளும் இருந்தன. இருப்பினும், அவை எதுவும் எங்களின் தோல்விகள் அல்ல என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment