27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு: சாரதி தப்பியோட்டம்!

வவுனியாவில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை பூவரசங்குளம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது.

இன்று (24) அதிகாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தம்பனை பகுதியில் இருந்து வவுனியா நகரப்பகுதிக்கு கப்ரக வாகனத்தில் மரங்கள் கடத்தி செல்லப்படுவதாக பூவசரங்குளம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குறித்தபகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மரங்களை கடத்திச்சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்தனர்.

குறித்த வாகனத்தில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அதிலிருந்து 6முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றுள்ளநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment