இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணியினரால் கையெழுத்து போராட்டம் நடைபெறவுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு குறிப்பிட்டு, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த தொடர் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 10ஆம் திகதி காலை, மாவிட்டபுரத்தில் போராட்டம் இடம்பெறும். இதன் பின்னர், பங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெறும்.
அதன் பின்னர் ஊர்திப் பவனி மாவட்டங்களிற்கு சென்று, அந்தந்த மாவட்டங்களில் கையெழுத்து போராட்டம் நடைபெறும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்க வலியுறுத்தி, சில மாதங்களின் முன்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஊடா, எம்.ஏ.சுமந்திரன் அணி போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த போராட்டமும் நடக்கிறது.




