26 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பெண் உதைத்ததில் ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துனர்!

இன்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் நடத்துனரை உதைத்ததில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக கடவட பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறியுள்ளார். பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் தெரிவித்தபோது, ​​கையால் தாக்கி உதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன், பேருந்தில் இருந்த சிலர் அந்த பெண்ணை பிடித்து கடவத்தை போலீசில் ஒப்படைத்தனர்.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், 34 வயதுடைய பெண் பல வருடங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

பெண்ணும் நடத்துனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண் மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

அந்தார்ட்டிக்கா மலையில் முதலில் ஏறிய இலங்கையர்

east tamil

எல்லை தாண்டிய 10 தமிழக மீனவர்கள் கைது!

Pagetamil

பாவித்த வாகன சந்தை வீழ்ச்சியடையும்!

Pagetamil

Leave a Comment