25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
மலையகம்

காணாமல் போன 13 வயது சிறுமியுடன் காட்டு குகைக்குள் பதுங்கியிருந்த 18, 58 வயதானவர்கள் கைது!

இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் 18 வயதான இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தனர்.

வேறு பகுதியிலிருந்து வந்து பேக்கரி வேலைக்காக தங்கியிருந்த 18 வயதான இளைஞனும், வயல் வேலைக்காக உழவு இயந்திரத்துடன் வந்து எரிபொருள் இல்லாமல் தங்கியிருந்த 58 வயதான ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

உடை தேய்க்க போவதாக வீட்டிலிருந்து சிறுமி வெளியேறியிருந்தார். அதற்கு சற்று முன்னதாக அந்த இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அந்த நபர்களுடன் சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!