ஹட்டன் வனராஜா தோட்டத்தின் சம்மர் ஹில் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த உத்தரவையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவொன்று ஹட்டனுக்கு சென்றுள்ளது.




