செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, வி.இராதாகிருஸ்ணன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




