5 வயது சிறுமியும், பாட்டியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!

Date:

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிட்டிகேகம பொகரவெவில கிராமத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றிற்கு செல்லும் கால்வாயை கடக்கச் சென்ற மூதாட்டி (60) மற்றும் பேத்தி (05) ஆகியோர் இன்று (01) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான பொல்பிட்டிய பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. பேத்தியை முன்பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த மூதாட்டி, ஹிட்டிகேகம விகாரைக்கு அருகில் உள்ள கால்வாயை கடக்ந்த போது, ​​கால்வாயின் நீரோட்டம் அதிகரித்து இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் சடலம் கால்வாய்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதுடன், காணாமல் போன பேத்தியின் சடலத்தைக் கண்டுபிடிக்க பிரதேசவாசிகள் மற்றும் பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பாட்டியின் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்