அந்தோனி வெரங்க புஷ்பிகா டி சில்வா கைது!

Date:

அண்மையில் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிகா டி சில்வா கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த செயற்பாட்டாளர், கோட்டையில் நீல நிற ஜீப்பில் இனந்தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், அவர் கடத்தப்பட்டவில்லை, தம்மால் கைது செய்யப்பட்டார் என கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்