29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்; ஜனநாயக விரோத சக்திகள் ஆட்சியை கைப்பற்ற அனுமதிக்க முடியாது: பதில் ஜனாதிபதி ரணில்!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து தமக்குக் கிடைத்த ஆலோசனையின் அடிப்படையில்; மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையைத் தணிக்க சுயாதீனமாக தீர்மானங்களை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்க முடியாது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சி தலைவர்கள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பது ஜனநாயக விரோதம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!