வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்: அள்ளியெடுத்த பொதுமக்கள்!

Date:

திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து ஹப்புத்தளை எண்ணெய் களஞ்சியசாலைக்கு 33000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்ற எரிபொருள் பவுசர் இன்று (11) காலை ஹப்புத்தளை பங்கெட்டிய, முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து, பவுசரில் இருந்து பெருமளவு எரிபொருள் வழிந்தோடியது. அந்த எரிபொருளை பெறுவதற்கு அந்த பகுதி மக்கள் முண்டியடித்தனர்.

வீதி வழுக்கி பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.

-இரா.சுரேஷ்குமார்-

spot_imgspot_img

More like this
Related

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்