26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வவுனியாவை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இரண்டு சிறுவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடைய பாலசுகந்தன், 35 வயதுடைய அனுஜா, 10 வயதுடைய பிரசன்னா, 08 வயதுடைய மேனலக்சன் எனும் ஒரு குடும்பமும், 38 வயதுடைய லிங்கேஸ்வரன், 40 வயதுடைய பிரதாம்பிகை எனும் மற்றுமொரு குடும்பமும் இதில் அடங்குகிறது.

நேற்று (10) இரவு 08 மணிக்கு தலைமன்னாரில் இருந்து, பைபர் படகில் இவர்கள் தமிழகம் சென்றுள்ளதாகவும், அதற்காக இலங்கை ரூபாவில் நான்கு லட்சம் கொடுத்துள்ளதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள 1ஆம் தீட்டை பகுதியில் 11ஆம் திகதியான இன்று காலை 07.00 மணிக்கு சென்றடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment