கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவார்.
இதேவேளை, அமைதியின்மையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




