அதிகார பேராசையால் செல்லாக்காசுகளாக மாறிய ராஜபக்சக்கள்: சுட்டிக்காட்டும் அனுர!

Date:

எல்லையற்ற அதிகாரத்திற்கான பசியின் காரணமாக ராஜபக்சக்கள் இலங்கையில் செல்வாக்கற்றவர்களாக மாறியதாக ஜேவிபி கூறுகிறது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்து குடும்பத்தை மையமாக கொண்ட அரசாங்கத்தை உருவாக்கும் ராஜபக்சக்களின் மனப்போக்கு அவர்களின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை புறக்கணித்து, ராஜபக்சக்களின் ஆட்சி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டதாக அனுரகுமார நினைவு கூர்ந்தார்.

அத்தகைய ஆட்சி இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் எங்குள்ளது என்பதை கடந்த சில நாட்களாக மக்கள், அரசாங்கத்திற்கு காட்டுவதாக சுட்டிக்காட்டினார்.

அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாலும், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாலும் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், அதிகாரத்தின் மீதான பிடி பனி மலை போல் உருகியது, குடும்ப உறுப்பினர்கள் இடம்பெயர்ந்தனர், மக்கள் பார்வையில் இருந்து விலகினர்.  ராஜபக்ச குடும்பத்தினர் நினைத்திருந்த அதிகாரத்தை விட மக்கள் சக்தி பலமாக இருப்பதால் பசில் ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...

ஈரான் ஜனாதிபதி பதவி விலகுகிறாரா?: உண்மை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஈரான்...

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்