வட்ஸ்அப்பின் புதிய அப்டேட்கள்!

Date:

வட்ஸ்அப் குரூப்பில் இணைத்துக் கொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம்.

வட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக வட்ஸ்-அப்பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அறிவிப்பில் ஒரே வட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வட்ஸ் அப் வொய்ஸ் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது இனி ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...

பௌத்த மத நிறுவன சீர்திருத்த திட்டம்: ஐதேக கொதிப்பு!

தம்ம நீதிமன்றங்களை நிறுவுவது மற்றும் விகார-தேவலகம் சட்டத்தைத் திருத்துவது உள்ளிட்ட, பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்