26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் நிரப்ப கட்டுப்பாடு!

வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட வரையறைகள் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று காலை எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இந்த வரையறைகள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு பம்ப் 2,500 ரூபாயும், முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாயும், கார்கள், வேன்கள் மற்றும் SUV களுக்கு 10,000 ரூபாயும் பெறுமதியான எரிபொருள் வழங்கப்படும்.

எவ்வாறாயினும், டீசல் தேவைப்படும் பஸ்கள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எரிபொருள் வரையறை விதிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்னர் அறிவித்திருந்தது.

எரிபொருள் வழங்கும் போது, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வாகனங்கள் பற்றிய தகவல் ஆவணத்தை பராமரிக்க வேண்டும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

Leave a Comment