நாடு முழுவதும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படைகளில் முக்கிய சில பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் அண்மையில் இடம்பெற்றது.
கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பல பாதுகாப்புத் துறை பிரதானிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு விமர்சித்துள்ளது.
அதனையடுத்து, சில பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி விமர்சித்தார்.
இந்த பின்னணியிலேயே மாற்றங்கள் இடம்பெற்று வருகிறது.




