மரியுபோல் நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை ரஷ்யப் படைகள் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. நேற்று மே 20 ஆம் திகதி ஆலையின் நிலவறைகளை ரஷ்ய படைகள் முழுமையா கைப்பற்றின.
ஆலைக்குள் பதுங்கியிருந்த கடைசி உக்ரைன் இராணுவமும் சரணடைந்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மே 16 முதல், 20ஆம் திகதி வரையான நாட்களில் அசோவ்ஸ்டல் ஆலைக்குள்ளிருந்த 2,439 உக்ரைனிய இராணுவத்தினர் சரணடைந்துள்ளனர்.
அசோவ்ஸ்டல் ஆலை முழுமையாக கைப்பற்றி, மரியுபோல் முழுமையாக கைப்பற்றி, இந்த நடவடிக்கை வெற்றியாக முற்றுப்பெற்றுள்ளதாகவும், அங்கிருந்த உக்ரைனியர்கள் அனைவரும் சரணடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் அறிக்கை செய்தார்.
மே 20 அன்று, 531 உக்ரைனிய இராணுவத்தினர் அசோவ்ஸ்டாலை விட்டு வெளியேறி சரணடைந்தனர்.
ஆலைக்குள் நிலை கொண்டிருந்த அசோவ் படையணியின் தளபதி மீது மரியுபோல் மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அவரை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பதாலும், விசேடமாக கவச வாகனத்தில் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மரியுபோலில் இறுதியாக நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேறும் நடவடிக்கை மேற்கத்திய பங்காளிகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்,




