27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மே 22 முதல் ஜூன் 1 வரையான மின்வெட்டு விபரம்: இரவு 6.30 மணியின் பின் மின்வெட்டு இல்லை!

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருகி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) முதல் ஜூன் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு இருக்காது.

மேலும், மே 22 முதல் ஜூன் 1ம் திகதி வரை மற்ற நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது.

எவ்வாறாயினும், கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயம் தவிர்ந்த ஏனைய இடங்களில் பரீட்சைகள் இடம்பெறாத நேரங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைப்படும்.

கைத்தொழில் வலயங்கள் (காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை) மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயத்தில் (காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை) அந்த நாட்களில் 3 மணி நேர மின்வெட்டு ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment