கோட்டாவிடம் நியமன கடிதத்தை பெற்றது வெறுப்பாக இருந்தது; ஒரு வார்த்தையும் பேசவில்லை: அமைச்சர் ஹரின்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றது தனக்கு வெறுப்பூட்டியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் நியமனக் கடிதத்தை பெற்றேன். அதனால் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதியுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னாண்டோ.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ இன்று ரணில் தலைமையிலான அரசில் இணைந்து, காணி மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ,

ஜனாதிபதி ராஜபக்ஷ இப்போது வெறும் பெயருக்குரிய அதிகாரி என்றும் அவர் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.

மற்ற நபர்களைப் போலல்லாமல், தன்னால் ஜனாதிபதிக்கு முன்னால் நேராக நிற்கவும், ஜனாதிபதியை அணுகவும், அவரை விமர்சிக்கவும் முடியும் என்று கூறிய அமைச்சர், தாம் சமநிலையான அணுகுமுறையை எடுக்க மாட்டார் என்று மீண்டும் வலியுறுத்தினார். பிரதமர் விக்ரமசிங்கவின் காரணமாக தாம் அமைச்சர் பதவியை ஏற்கவில்லை என தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரதமரை அதிகம் விமர்சித்த ஒருவர் தாம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது என அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்காவிட்டால் ஒரு நாடு இருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பதவிகளை ஏற்றுக்கொள்வது குறித்து 5 நாட்கள் ஆலோசித்ததாகத் தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, நாட்டை முன்னேற்றும் நோக்கில் பிரதமர் செயற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இல்லை எனவும் தெரிவித்தார். நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பதவி விலகுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவியை ஏற்பதற்கு முன்ன், ஜனாதிபதியை எவ்வாறு பதவிநீக்குவது என்பது உள்ளிட்ட 7 விடங்களை பிரதமருடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பெர்னாண்டோ தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடையக்கூடும் என்று கூறினார், இருப்பினும் தான் எந்த விளையாட்டுகளிலும் ஈடுபடவில்லை என்றும் நாட்டிற்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டில் அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ அறிந்திருப்பதாகக் கூறிய அமைச்சர், நாட்டு நிலைமை சீரடைந்ததும் ஜனாதபதி பதவி விலகி செல்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாடு மீள முடியும் எனவும், கட்சிகள் அற்ப சிந்தனையுடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்