நேட்டோவில் உறுப்பினராக சேருவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் அறிவித்தார்.
“நாங்கள் ஒரு சகாப்தத்தை விட்டுவிட்டு மற்றொரு சகாப்தத்தைத் தொடங்குகிறோம்,” என்று ஆண்டர்சன் கூறினார்.
“இது ஒரு வருடத்திற்கு மேல் எடுக்கக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து நேட்டோவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரு நாடுகளும் “பதிலை” எதிர்பார்க்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
பெப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ஜனாதிபதி புடின் தனது “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” அறிவித்ததை அடுத்து, நேட்டோல் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளிற்குள் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.
சுவீடனின் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் பல தசாப்தங்களாக நடுநிலைமையை ஒதுக்கி வைத்துவிட்டு நேட்டோவில் சேர அரசாங்கத்திற்கு அனுமதி கொடுத்தனர்.
“நேட்டோ சுவீடனை பலப்படுத்தும், சுவீடன் நேட்டோவை பலப்படுத்தும்” என்று ஆண்டர்சன் கூறினார். இருப்பினும், நேட்டோவின் நிரந்தர இராணுவ தளங்கள் அல்லது அணு ஆயுதங்களை நாடு நடத்தாது என்று ஸ்வீடன் பிரதமர் கூறினார்.
நேட்டோவில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் கோரிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் ஆதரவு அளித்துள்ளார்.



