நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொலிசாருக்கும் வழங்கப்பட்டது!

Date:

முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த மே12 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது.

இதில் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மே 16ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் இலங்கை தமிழரசு கட்சி பிரதேச கிளையினரால் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வீதியால் வாகனத்தில் சென்ற பொலிசாரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்