இந்திய மீனவர்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Date:

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​ தொடர்பான வழக்கு இன்று (12) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்​ பி.ஆர்​ இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்து

இதன்போது​ 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை,​ ​ இழுவை மடி வலைகளை உடைமையில்​ வைத்திருந்தமை​, இழுவை மடி வலைகைளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டமை​ ஆகிய​ மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையை விதித்து விடுதலை செய்தார்.

அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது​. ​

இதே நேரம் வழமை போன்று​ இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்