24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
மலையகம்

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை- கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தின் கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (2) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தின் லயக் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வேலு ராஜரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (1) இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்கு பின்னால் இருந்த கிணற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டார்.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!