27.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பண்டாரநாயக்க சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சு.க முறைப்பாடு!

காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கா சிலைக்கு களங்கம் விளைவித்து சேதப்படுத்த முயற்சித்தமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

மேலும், சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்படி, காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சிலையின் கழுத்தில் கயிற்றின் உதவியுடன் ஏறியது மற்றும் சிலையை கருப்பு துணியால் மூடிய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலையை அவமதிக்கும் வகையில்  நடந்து கொள்வதை  அவதானித்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

east tamil

சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

east tamil

கல்வி அமைச்சின் அதிபர் நியமன நடவடிக்கை

east tamil

பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

east tamil

Leave a Comment