Pagetamil
மலையகம்

ராஜபக்சக்களை மக்கள் விரட்டுகிறார்கள்; அவர்களுடன் இடைக்கால அரசு இல்லை: வேலு குமார் எம்.பி

ராஜபக்சக்கள் மீது மக்கள் கோபம் கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை எவ்வாறு அமைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து தம்மை சுயாதீனமாக பிரகடனப்படுத்தியதாகவும், எனினும் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய நிர்வாகத்துடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்காது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பதவி விலகலை பொதுமக்கள் கோரும் மக்களின் குரலை ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன எவ்வாறு பொதுமக்களின் குரலை புறக்கணித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!