3வது நாளில் ஐ.ம.ச பேரணி

Date:

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாம் நாளில் கலிகமுவவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.

காலை 9 மணிக்கு தொடரும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் பின்னர் தனோவிட்டவை சென்றடையவுள்ளது.

நாளைய தினம் தனோவிட்டவில் இருந்து யக்கல வரையிலான ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ந்து 30ஆம் திகதி பேலியகொடவை சென்றடையும்.

அதனைத் தொடர்ந்து பேலியகொடையில் இருந்து மே தின ஊர்வலம் இடம்பெற்று பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சென்றடையும்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பெருமளவிலான நபர்கள் கலந்துகொண்டதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் சாதகமான எதையும் சாதிக்கத் தவறியுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு உதவுவதற்காக மக்கள் போராட்டம் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்