அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியதை தான் ஆமோதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று ருவிற்றர் பதிவில் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும். 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் (22) முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சரவை மற்றும் பிரதமரை பதவி விலகுமாறும், சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆளுந்தரப்பில் இருந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழன்று செல்வதையடுத்து, நாடாளுமன்ற பெரும்பான்மைக்கும் குறைவான பலமே அரசிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




