27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

மஹிந்த யுகம் முடிந்து விட்டது; ஊத்தை அமெரிக்கரான சகோதரரால் வந்த வினை: விமல் வீரவன்ச!

பிரதமர் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச குறித்து தாம் வருத்தமடைந்துள்ளதாகவும், ஊத்தை அமெரிக்கரான அவரது சகோதரனே அவரை இந்த நிலைக்கு தள்ளியதாகவும் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த அத்தியாயம் இப்போது முடிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வீரவன்ச கூறினார்.

அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியை தற்போது ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச, தமக்கு உதவிய நாடுகளை கோபப்படுத்திய அரசாங்கத்தினால் இந்த 4-5 பில்லியன் டொலர் பிரச்சினைக்கு விடை காண முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment