Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறக்கப்பட்டது!

இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்

அந்தரங்க வீடியோ இருப்பதாக மிரட்டப்பட்டு 3 வருடங்களாக சீரழிக்கப்பட்ட யாழ் சிறுமி; ரிக்ரொக் காரி செய்த கொடுமை: யாழில் கூண்டோடு சிக்கும் காமுக கூட்டம்!

Pagetamil

இன்று இரவு உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகும்!

Pagetamil

தந்தை செல்வா நினைவு

Pagetamil

வெளிமாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் ஆட்களை ஏற்றி வந்து புதுக்குடியிருப்பில் அநுரவின் பிரச்சார கூட்டம்!

Pagetamil

யாழில் இணையக்குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!