கடவத்தையில் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 70 வயதுடைய நபரே ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி நகரில் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மற்றொருவர் உயிரிழந்தார்.
இன்று உயிரிழந்தவர் நீரிழிவு, உயர் இரத்தஅழுத்தங்களிற்கு சிகிச்சை பெற்று வருபவர்.




