யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரச பேருந்தை, தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
விபத்து நடந்த போது தனியார் பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளனர்.
இதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
22 பேர் வரையில் சிறு காயமடைந்துள்ளார்கள்.
முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
-பிருந்தாபன்-




