முல்லைத்தீவில் கட்டுத் துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

Date:

முல்லைத்தீவு – நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியில் சிக்சி உயிரிழந்துள்ளார்.

நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு, மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மல்லாவி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பிரேத பிரசோதனை மற்றும் பொலிஸ் அறிக்கையின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்