டொலர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் சகல அரச நிறுவனங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.






