தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் அபாயங்கள்: எச்சரிக்கிறது ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல்!

Date:

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தில் உள்ள மூன்று முக்கிய பகுதிகள் குறித்து ஆழ்ந்த கவலையை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா வெளிப்படுத்தியுள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான தாக்கம் ஏற்படுமென எச்சரித்துள்ளது.

தீவிரமான கவலைகள் தீர்க்கப்படும் வரை தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று (9) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா இந்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அவசரப்பட வேண்டாமென்றும் அது நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பத்திரிகை துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், தகவல் அறியும் உரிமையில் தாக்கத்தை ஏற்படுத்தும், தரவுப் பாதுகாப்பு ஆணைக்குழு பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அது சுதந்திரமானது அல்ல.இதனால் அரசியல் தலையீடுகள் ஏற்படுமென்ற 3 முக்கிய கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்