24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

இலங்கையிலிருந்து சென்ற இளம்பெண்ணின் காலணிக்குள் இருந்த தங்கம் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இளம் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த பெண் பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், பயணிகளின் காலணியின் அடியில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பயணியின் காலணிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்க்பட்டிருந்த 393 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ரூபாய் 18.84 இலட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment